இலங்கை

வியாழேந்திரனுக்கு மீண்டும் சிறை!

Published

on

Loading

வியாழேந்திரனுக்கு மீண்டும் சிறை!

பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி நேற்று பிற்பகல், சந்தேக நபரான முன்னாள் இராஜாங்க அமைச்சரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், பிணை நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்யத் தவறியதால், அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரிடமிருந்து மணல் அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக 1.5 மில்லியன் ரூபா இலஞ்சம் பெறுவதற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, கடந்த மார்ச் 25 அன்று இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழு அவரை கைது செய்து, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது. முதலில் அவர் ஏப்ரல் 1 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், பின்னர் அவரது விளக்கமறியல் காலம் இன்று வரை நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version