இலங்கை

கொழும்பில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் கைது

Published

on

கொழும்பில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் கைது

காலாவதியான விசாக்களின் கீழ் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் இன்று (10) பிற்பகல் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர்.

இராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு அலுவலக வளாகத்தில் இருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

இந்த இந்தியர்கள் சுமார் 3 மாதங்களுக்கு முன்பு இந்த நாட்டிற்கு பிரவேசித்துள்ளதுடன், அவர்களில் 17 பேர் சுற்றுலா விசாக்களில் வந்துள்ளனர்.

ஏனையவர்களில், 4 பேர் குடியிருப்பு விசாக்களின் கீழும், ஒருவர் வணிக விசாக்களின் கீழும் நாட்டிற்கு வந்துள்ளனர்.

குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகத்திற்கிடமான இரண்டு இந்திய பிரஜைகளிடம் நடத்தப்பட்ட திடீர் விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

அவர்கள் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகள் தற்போது வெலிசரவில் உள்ள தற்காலிக தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் நாடு கடத்தப்படவுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version