இலங்கை

ஷிரந்தி ராஜபக்ச மீது குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு

Published

on

ஷிரந்தி ராஜபக்ச மீது குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு

 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, கம்பஹா பகுதியில் உள்ள ஒரு நிலத்தை சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு அளித்துள்ளதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த நிலத்தை ஷிரந்தி ராஜபக்ச வேறொருவருக்கு விற்றுவிட்டு, பின்னர் அது ஒரு பௌத்த மையத்திற்கு நன்கொடையாக வழங்கியதாக மகிந்த ஜெயசிங்க கூறியுள்ளார்.

Advertisement

அந்த பௌத்த விகாரைக்கு சொந்தமானதாகக் கூறப்படும் காணியின் உரிமைகளை ஆய்வு செய்தபோது, ​​அந்தக் காணி ஷிரந்தி ராஜபக்சவுக்கு செந்தமானது எனவும்,

அவர் அதை 2012 பிப்ரவரி 05 அன்று கம்பஹா, மானெல்வத்தவில் உள்ள நாகானந்தா பௌத்த மையத்திற்கு மாற்றியமைத்ததும் தெரியவந்ததாகவும் கூறியுள்ளார்.

ற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 2023 அக்டோபர் 10 ஆம் திகதி தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு விற்கப்பட்டதாகவும்,

Advertisement

அந்த நிலத்தில் உள்ள கட்டடத்திற்கான மின்சாரக் கட்டணத்தை ஒரு மதகுரு செலுத்தியதாகவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தக் கோரி ஷிரந்தி ராஜபக்ச மீது , குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version