பொழுதுபோக்கு
அவர் ஒரு சிறந்த தந்தை: அவரது வாழ்க்கை இவர்கள் தான்; பிரபுதேவா முன்னாள் மனைவி பேச்சு!
அவர் ஒரு சிறந்த தந்தை: அவரது வாழ்க்கை இவர்கள் தான்; பிரபுதேவா முன்னாள் மனைவி பேச்சு!
இந்திய சினிமாவில் முன்னணி நடன இயக்குனராகவும் நடிகராகவும் இருக்கும் பிரபுதேவா குறித்து அவரது முன்னாள் மனைவி கூறிய கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.ஆங்கிலத்தில் படிக்க: Prabhudheva’s ex-wife says she won’t say anything bad about actor-choreographer, calls him a great father: ‘I would be angry with him if…’இந்திய சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமாகி, அதன்பிறகு நடன இயக்குனராக மாறிய பிரபுதேவா, அடுத்து நடிகர், இயக்குனர் என பன்முக திறமையுடன் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படங்களை இயக்கியுள்ள பிரபுதேவா, தற்போது தமிழ், மலையாளம் இந்தி என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.இதனிடையே கடந்த 1995-ம் ஆண்டு ராம்லத் என்பவரை திருமணம் செய்துகொண்ட பிரபுதேவா, கடந்த 2011-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். 2011-ல் நடிகை நயன்தாராவை பிரபுதேவா காதலிப்பதாக வதந்தி பரவியபோது, அவரது தனிப்பட்ட வாழ்க்கை மையமாக இருந்தது. ஏராளமான மக்கள் கவனம் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, பிரபுதேவா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார், அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இப்போது, விவாகரத்து பெற்று கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு, ராம்லத் அவர்களின் சமன்பாடு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.யூடியூப் சேனலான அவள விகடன் நிகழ்ச்சியில் பேசிய ராம்லத், தனது முன்னாள் கணவரைப் பற்றி எதுவும் மோசமாகப் பேச மாட்டேன் என்று கூறினார். அவரை ஒரு சிறந்த தந்தை என்று அழைத்த ராம்லத், “அவரது குழந்தைகள் தான் அவரது வாழ்க்கை. அவர் இருவருடனும் மிகவும் இணைந்தவர். தந்தை-மகன் மூவரும் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் ஒருவருக்கொருவர் பேசுகிறார்கள் என்று கூறியுள்ளார்.தொடர்ந்து, விவாகரத்திற்குப் பிறகும் பிரபுதேவா எப்போதும் தனக்கு எப்படி உதவினார் எனப்து குறித்து பேசிய, ராம்லத், இன்றுவரை, அவர் தனது குழந்தைகளுக்கான அதே பொறுப்புணர்வு உணர்வைப் பகிர்ந்து கொள்கிறார், மேலும் அவர்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறார். “எங்கள் குழந்தைகள் விஷயத்தில் நாங்கள் ஒவ்வொரு முடிவையும் பரஸ்பரம் எடுக்கிறோம். நாங்கள் பிரிந்த பிறகு அவர் என்னைப் பற்றி ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் நான் அவர் மீது கோபப்படுவேன், ஆனால் அவர் ஒருபோதும் அப்படிச் சொல்லவில்லை. அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி நான் எதுவும் தவறாகப் பேச மாட்டேன் என்று கூறியுள்ளார்.பிரபுதேவா 1995 இல் ராம்லத்தை மணந்தார். 16 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு அவர்கள் விவாகரத்து செய்தனர். பிரபுதேவா தற்போது ஹிமானி சிங்கை மணந்தார். 2023 இல், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.