இலங்கை

இலங்கை வங்கியின் கிளை மூடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அவதி!

Published

on

இலங்கை வங்கியின் கிளை மூடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அவதி!

யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் அமைந்திருக்கின்ற இலங்கை வங்கி கிளை இன்று (11) 12. 30 மணியுடன் மூடப்பட்டுள்ளதால் அதிகளவான மக்கள் வங்கிக்கு வந்து திரும்பிச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. 

2024 ஆம் ஆண்டின் இலாபத்தினை அடிப்படையாகக் கொண்டு இலங்கை வங்கியின் பணிப்பாளர் சபையினால் வழங்குவதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட ஊக்கிவிப்பு கொடுப்பனவிற்கு நிதி அமைச்சின் ஒப்புதல் வழங்கப்படுதல் தாமதமாக்கப்படுவதன் காரணமாக தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமையால் எமது வங்கி ஊழியர்கள் 11 .4 .2025 இன்று 12:30 மணியுடன் கருமைப்பீடச் சேவைகளில் இருந்து விலகுவதாக அறிய தருகிறோம்.

Advertisement

வங்கியின் பெறுமதி மிக்க வாடிக்கையாளர்களான உங்களுக்கு இதனால் ஏற்படும் அசெளகரியங்கள் தொடர்பில் நாம் ஆழ்ந்த கவலை அடைகிறோம் என்று அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version