இலங்கை

பறந்து கொண்டிருந்த விமானத்தில் பாலியல் சேட்டை ; இலங்கையில் கைதான இந்திய பிரஜை

Published

on

பறந்து கொண்டிருந்த விமானத்தில் பாலியல் சேட்டை ; இலங்கையில் கைதான இந்திய பிரஜை

துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பெண் பயணி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (12) காலை துபாயிலிருந்து ஃபிட்ஸ் ஏர் பிட்ஸ் ஏர் விமானத்தில் ஏ.டி. 822 விமானத்தின் மூலம் வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

சந்தேக நபர் விமானத்தில் பயணித்து கொண்டிருந்த போது பெண் ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும், இது குறித்து விமானக் குழுவினருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் சந்தேக நபர் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டதகவும் கூறப்படுகிறது.

விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் இந்திய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 35 வயதுடையவர் என்றும் குறித்த சந்தேக நபர்  கொழும்பு  நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version