இலங்கை

யாழில் லொறியால் பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர் ; நிர்கதியான குழந்தைகள்

Published

on

யாழில் லொறியால் பறிபோன இளம் குடும்பஸ்தரின் உயிர் ; நிர்கதியான குழந்தைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது.

Advertisement

கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்று மெதுவாக சென்றுகொண்டிருந்த போது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் மரணமடைந்துள்ளார்.

சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், டிப்பர் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை நீதிமன்ற நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version