இலங்கை

அமெரிக்க பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Published

on

அமெரிக்க பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

அமெரிக்க பிரஜை ஒருவர் சுமார் 230 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (15) கைது செய்யப்பட்டார்.

Advertisement

அவர் கைது செய்யப்பட்டபோது 23 கிலோ கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபர் தாய்லாந்தில் இருந்து குஷ் போதைப்பொருளுடன் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

31 வயதான அமெரிக்க பிரஜை, அமெரிக்காவில் காணி விற்பனை நிறுவனம் ஒன்றில் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது.

Advertisement

அமெரிக்க பிரஜை கொண்டு வந்த சூட்கேஸில் 1 கிலோ கிராம் எடை கொண்ட 23 பெக்கெட்டுகளில் குஷ் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version