இலங்கை
ஆசிரியர், மாணவனுக்கு அரிவாள் வெட்டு ; பென்சிலுக்காக மாணவன் செய்த மோசமான செயல்
ஆசிரியர், மாணவனுக்கு அரிவாள் வெட்டு ; பென்சிலுக்காக மாணவன் செய்த மோசமான செயல்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டியா சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரிவாளால் வெட்டியதால் காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறான்.
பென்சில் வாங்குவதற்கு இடையே 2 மாணவர்களுக்கு சண்டை வந்துள்ளது. அதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஒரு மாணவனை இன்னொரு மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலை தடுக்க அங்கே இருந்த ஆசிரியர் முயன்றுள்ளார். அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
அரிவாளால் வெட்டப்பட்ட மாணவன் மற்றும் ஆசிரியர் தற்போது நலமுடன் உள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.