இலங்கை

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு!

Published

on

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை நடுத்துறை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு கடலுக்கு மீன்படிக்கச் சென்ற குறித்த மீனவர் இன்று அதிகாலை மீன்பிடித்து விட்டு படகின் ஒரு பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல்போயிருந்தார்.

Advertisement

இவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல்போனவரின் சடலம் மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளது.

பாலமுனையைச் சேர்ந்த 59 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விவாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version