இலங்கை

தென்னையால் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

Published

on

தென்னையால் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

கள் இறக்குவதற்காக தென்னை மீது ஏறியவர், தவறி வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்தார். நேற்றுக் காலை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கல்வியங்காட்டைச் சேர்ந்த சின்னத்துரை ரவி (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

தென்னையில் ஏறியபோது, தென்னையில் கட்டப்பட்டிருந்த பொச்சுமட்டை அறுந்ததைத் தொடர்ந்தே  அவர் மரத்தில் இருந்து தவறி வீழ்ந்துள்ளார். அவரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், குறித்த நபர் முன்னதாகவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள்; தெரிவித்துள்ளனர்.

Advertisement

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version