இலங்கை

பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் கொலை ; விசாரணையில் சிக்கிய இளைஞன்

Published

on

பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் கொலை ; விசாரணையில் சிக்கிய இளைஞன்

மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரணவராவ சந்தியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் நேற்று (14) அதிகாலை நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவர்  வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லவாய ரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

இந்த கொலை சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான இளைஞன் ரணவராவ சந்தியில் வைத்து நேற்றைய தினம் காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லவாய ரந்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version