இலங்கை
பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரி கொலை ; பிரதான சந்தேக நபர் கைது
பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரி கொலை ; பிரதான சந்தேக நபர் கைது
பூஸ்ஸ சிறைச்சாலையின் ஓய்வுபெற்ற சிறை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (15) போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அம்பலாங்கொட குளியாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான விஜேமுனி லலந்த பிரிதிராஜ் குமார என்பவராவார்.
சந்தேக நபர் தெற்கின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கரந்தெனிய சுத்தாவின் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பதையும் பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.
காலி மற்றும் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுகளில் நடந்த ஏராளமான கொலைகள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.