இலங்கை

மாடியிலிருந்து குதித்த சிறுவன் ; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Published

on

மாடியிலிருந்து குதித்த சிறுவன் ; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றின் இரண்டாம் மாடியிலிருந்து குதித்த 12 வயதான சிறுவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுவனை வீட்டில் சிறைப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகி இருப்பதாகவும், அவரைத் தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

குறித்த சிறுவன், ஏனைய சிறார்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது கருத்துமோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது அருகிலிருந்த வீடொன்றின் வாயிற்கதவைப் பலமாகத் தட்டியதை அடுத்து, அந்த வீட்டின் உரிமையாளர் சிறுவனைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்று, வீட்டின் மாடியில் உள்ள அறையொன்றில் அடைத்துக் கதவைப் பூட்டியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த சிறுவன் குறித்த அறையின் யன்னல் வழியாகக் குதித்ததை அடுத்து, கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் , குறித்த சிறுவனைச் சிறைப்படுத்த உதவிய குற்றச்சாட்டில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

வீட்டின் உரிமையாளர் தொடர்ந்தும் தலைமறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version