இலங்கை
யாழில் புத்தாண்டு தினத்தில் நேர்ந்த சோகம் ; தென்னையில் ஏறியவருக்கு நேர்ந்த கதி
யாழில் புத்தாண்டு தினத்தில் நேர்ந்த சோகம் ; தென்னையில் ஏறியவருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை பிரதேசத்தில் புத்தாண்டு தினத்தில் கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கல்வியங்காட்டை சேர்ந்த சின்னத்துரை ரவி (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தென்னை மரத்தில் ஏறிய போது, தென்னையில் கட்டப்பட்டிருந்த பொச்சு மட்டை கழன்று விழுந்தமையால் நிலை தடுமாறி தென்னையில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்து படுகாயமடைந்தவரை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.