இலங்கை

வீதியோரமாக நின்றவரை பலியெடுத்த மோ.சைக்கிள்

Published

on

வீதியோரமாக நின்றவரை பலியெடுத்த மோ.சைக்கிள்

வீதியோரமாக நின்று கதைத்துக் கொண்டிருந்தவர் மீது, அதிவேகமாக வந்த மோட்டார்சைக்கிள் மோதியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த இரட்ணவடிவேல் இரவீந்திரன் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

கடந்த 11ஆம் திகதி, வீதியோரமாக சைக்கிளை நிறுத்திவிட்டு இன்னொருவருடன் கதைத்துக் கொண்டிருந்தபோதே, அதிவேகமாக வந்த மோட்டார்சைக்கிள் அவரை மோதியுள்ளது. மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சையின்போது நேற்று உயிரிழந்தார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளைச் செலுத்தியவர் உட்பட மேலும் இருவர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version