இலங்கை

24 வயது இளைஞன் விமான நிலையத்தில் கைது

Published

on

24 வயது இளைஞன் விமான நிலையத்தில் கைது

   வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (15 ) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஆவர்.

Advertisement

சந்தேக நபர் துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து 22,800 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 114 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் 34 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version