இலங்கை
உள்ளூராட்சி தேர்தல் 1,387 முறைப்பாடுகள்!
உள்ளூராட்சி தேர்தல் 1,387 முறைப்பாடுகள்!
2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 1,387 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 08 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1,293 முறைப்பாடுகளும் ஏனைய விடங்கள் தொடர்பில் 86 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.