இலங்கை

தவறான முடிவால் நபரொருவர் இறப்பு!

Published

on

Loading

தவறான முடிவால் நபரொருவர் இறப்பு!

முல்லைத்தீவு – ஐயக்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

50 வயதுடைய அந்தக் குடும்பத்தலைவர் வீட்டில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக, கடந்த எட்டாம் திகதி தவறான முடிவெடுத்து கிருமி நாசினியை அருந்தியுள்ளார். மறுநாளே தான் கிருமி நாசினியை அருந்திய விடயத்தை வீட்டாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

Advertisement

இதையடுத்து, முல்லைத்தீவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version