இந்தியா

தென்னிந்தியப் பெருங்கடலில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

Published

on

தென்னிந்தியப் பெருங்கடலில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

தென்னிந்தியப் பெருங்கடலில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சுனாமி எச்சரிக்கைகள் அல்லது ஆலோசனைகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Advertisement

நிலநடுக்கம் ஏற்பட்ட இடம் மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் 75 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதற்கிடையில், தெற்கு பிலிப்பைன்ஸிலும் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

Advertisement

இருப்பினும், இந்த நிலநடுக்கங்களால் அந்த நாடுகளில் சொத்துக்கள் அல்லது உயிர் இழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version