இலங்கை

வெள்ளவத்தையில் இருவர் அதிரடியாக கைது – சிக்கிய பெருந்தொகை உண்டியல் பணம்

Published

on

வெள்ளவத்தையில் இருவர் அதிரடியாக கைது – சிக்கிய பெருந்தொகை உண்டியல் பணம்

பணம் தூய்மையாக்கல் மற்றும் பண தூய்மையக்கலுக்கு உதவிய குற்றத்திற்காக இரண்டு சந்தேக நபர்கள் 5,745,000 ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெள்ளவத்தை – கிருலப்பனை பகுதியை சேர்ந்த 49 மற்றும் 39 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடாளவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும், சோதனை நடவடிக்கையில் கிருலைப்பனையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Advertisement

சந்தேக நபர்களிடம் இருந்து 5,745,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் அப்பகுதியில் எரிவாயு கடை நடத்தி வருகிறார்.

மேலும் அவர் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 இதற்கிடையில், பணம் தூய்மையாக்கல் உதவியதற்காக மற்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சந்தேக நபர்களில் ஒருவரின் வசம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது கடை நடத்துவதன் மூலம் கிடைத்த வருமான என்பது தொடர்பில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version