இலங்கை

தமிழர் பகுதியில் இரு காவாலிகளை தூக்க கொழும்பிலிருந்து வந்த விசேட குழு!

Published

on

தமிழர் பகுதியில் இரு காவாலிகளை தூக்க கொழும்பிலிருந்து வந்த விசேட குழு!

   மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்படுள்ளனர்.

கொழும்பிலிருந்து வருகை தந்த விஷேட பொலிஸ் குழுவினர் கைது செய்து வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Advertisement

சந்தேக நபர்கள் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனையில் போதைப்பொருளுடன் நேற்று (16) இரு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து வருகை தந்த விஷேட பொலிஸ் குழுவினரே இவர்களைக் கைது செய்துள்ளதுடன், இவர்களிடமிருந்து 70g ஐஸ் போதைப்பொருள், 60g ஹெரோயின், 150g கேரள கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், மிக நீண்ட நாட்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிய வருகின்றது.

Advertisement

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் சான்றுப்பொருட்களையும் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை இவ்வாறான நபர்கள் தொடர்பில் பொதுமக்கள் பொலிசாருக்கு அவசர இலக்கம் 107 மூலம் தமிழில் முறைப்பாடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version