இலங்கை

ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் பேருந்துடன் மோதிய முச்சக்கரவண்டி – 06 பேர் படுகாயம்!

Published

on

ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் பேருந்துடன் மோதிய முச்சக்கரவண்டி – 06 பேர் படுகாயம்!

ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் டிக்கோயா நகருக்கு அருகில், அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியொன்று தனியார் பேருந்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், படுகாயமடைந்த மூன்று பேர் கண்டி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இதில் ஒரு பள்ளி மாணவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி அதிகளவு மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

பேருந்து ஓட்டுநர் ஹட்டன் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

                                                              லங்கா4 (Lanka4)

Advertisement

(வீடியோ VIDEO)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version