இலங்கை

ஜனாதிபதி அநுர வருகையால் யாழில் மாயமான சோதனைச்சாவடிகள்!

Published

on

ஜனாதிபதி அநுர வருகையால் யாழில் மாயமான சோதனைச்சாவடிகள்!

   மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி அனுர குமார வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டார்.

Advertisement

இதற்காக ஏ9 வீதி மற்றும் பூநகரி வீதிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பயணம் மேற்கொண்டார்.

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாழ் பகுதியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடி, பூநகரி வீதியில் சங்குப்பிட்டி சோதனை சாவடியுமே இவ்வாறு திடீரென அகற்றப்பட்டது.

அதோடு அங்கு படையினரோ, பொலிஸாரோ அங்கு எவரும் கடமையில் இருக்கவில்லை.

Advertisement

ஜனாதிபதி வரும்போது மட்டும் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டமை ஏன் என்ற சந்தேகம் மக்கள் மாத்தியில் எழுந்துள்ளது.

அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து சில மாதங்களுக்கு முன்னரும் அந்த சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டு, மீண்டும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version