இலங்கை

தீயில் முற்றாக எரிந்து நாசமான கடை

Published

on

தீயில் முற்றாக எரிந்து நாசமான கடை

  மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானாட்டான் சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள வாகனங்களுக்கான வயரிங் பழுது பார்க்கும் கடை ஒன்றில் வியாழக்கிழமை (17) மாலை ஏற்பட்ட தீப் பரவல் காரணமாக கடை முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.

கடைக்கு உள்ளே நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் வண்டிகளும் முற்றாக எரிந்துள்ளதாக தெரிய வருகிறது.

Advertisement

அருகில் உள்ள கிருஸ்தவ தேவாலயத்தில் பெரிய வியாழன் வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தமையால் அங்கிருந்த இளைஞர்கள் ஓடி வந்து தீப்பரவலை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் கடை முற்றாக எரிந்து அதற்குள் உள்ள இயந்திர பொருட்களும் எரிந்து சாம்பலாகி உள்ளன.

கடையில் ஏற்பட்ட திடீர் மின் ஒழுக்கு காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version