இலங்கை

பொலிஸ்மா அதிபரே சட்டத்துக்கு அச்சப்படுவதுதான் எங்கள் ஆட்சி!

Published

on

பொலிஸ்மா அதிபரே சட்டத்துக்கு அச்சப்படுவதுதான் எங்கள் ஆட்சி!

தென்னக்கோனை சுட்டிக்காட்டி அநுர உரை

சட்டம் அனைவருக்கும் சமனாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை நான் கட்டியெழுப்பியுள்ளேன். இதற்கு ஆகச்சிறந்த உதாரணம், பொலிஸ்மா அதிபரே பொலிஸாருக்கு அச்சமடைந்து பதுங்கியிருந்தமையே – இவ்வாறு ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் மேலும் தெரிவித்ததாவது:
இன்று சட்டம் அனைவருக்கும் பாரபட்சம் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. முன்னாள் அமைச்சர்களிடம் இருந்த சட்டவிரோத வாகனங்கள் பறிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத சொத்துக்களைக் கைப்பற்றி வருகின்றோம். இவ்வளவு ஏன்? பொலிஸ்மா அதிபரே பொலிஸாருக்குப் பயந்து ஒளிந்திருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவ்வாறான ஆட்சியைத்தான் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். எம்மைப் பொறுத்தவரை சட்டத்தை மிகவும் நேர்த்தியாக நடைமுறைப்படுத்துவதே பிரதான கொள்கை.

அத்துடன், மக்களின் பணம் மக்களுக்குத்தான் என்பதை நாங்கள் மிகவும் இதயசுத்தியுடன் செயற்படுத்துகின்றோம். ஜனாதிபதியாக இருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்களின் செலவுகளுக்கு அவர்கள்தான் பொறுப்பு. மக்களின் பணத்தில் ஒரு சதத்தையேனும் விரமாக்க எவருக்கும் அனுமதியில்லை – என்றார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version