இலங்கை

மகிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்திலேயே கிழக்கு வெளுத்தது!

Published

on

மகிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்திலேயே கிழக்கு வெளுத்தது!

   மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்திலேயே, கிழக்கு மாகாணத்துக்கு பல்வேறு அபிவிருத்திகளை செய்து காட்டியுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வியாழக்கிழமை (17) மூதூர் தொகுதிக்கான உள்ளூராட்சிமன்ற தேர்தலில், பெரமுன கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

Advertisement

எமது எதிர்கால ஆட்சியில், இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்கு, முன்னுரிமை வழங்குவோம். திருகோணமலை மாவட்டம் அதி உச்ச அபிவிருத்திகளை மகிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்திலேயே அடைந்தது. இதனை யாரும் மறுக்க முடியாது.

கிராமங்களை அபிவிருத்தி செய்கின்ற ஒரு தேர்தலை நாங்கள் எதிர்நோக்கி இருக்கின்றோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில், திறமையான, நேர்மையான இளைஞர் யுவதிகளை களம் இறக்கி உள்ளோம்.

எனவே, உங்கள் கிராமத்துக்கு பொருத்தமான தலைவர்களை வாக்களித்து தெரிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version