இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

Published

on

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கேபின் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விமானத்தில் உணவு கொடுப்பனவை மறு ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கேபின் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்த போதும், சரியான தீர்வு கிடைக்கப்பெறவில்லை.

இதனால் பணி நேரத்திற்கு ஏற்றவாறு வேலை நிறுத்த போராட்டத்தை ஏப்ரல் மாதத்தில் தொடங்கியதாக சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அதற்கமைய அவர்கள், பணிப் பட்டியல்களின்படி பணிபுரிவார்கள் என்றும், குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே பணியாளர் மையத்திலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அத்துடன் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் சங்கம் வலியுறுத்தியது.

அதேவேளை கடந்த காலத்தில் துவண்டுபோன ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தற்போது சாதகமான வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், கோவிட் தொற்றுநோய்களின் போது செய்யப்பட்ட கொடுப்பனவு நிறுத்தங்களை மீண்டும் வழங்குமாறு கேபின் குழு உறுப்பினர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version