இலங்கை

தந்தையை படு கொடூரமாக கொன்ற மகன் ; விசாரணையில் வெளிப்படுத்திய பகீர் தகவல்

Published

on

Loading

தந்தையை படு கொடூரமாக கொன்ற மகன் ; விசாரணையில் வெளிப்படுத்திய பகீர் தகவல்

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் உருகொடவத்தை பகுதியில் மகன் ஒருவர் தனது தந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

உயிரிழந்தவர் உருகொடவத்தை, அவிசாவளை வீதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, மகன் இரும்பு கம்பியால் இறந்தவரின் தலையில் அடித்துள்ளார். தாக்குதலில் காயமடைந்த தந்தை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சடலம் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குற்றத்தைச் செய்த இறந்தவரின் 20 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version