இலங்கை

கள்ள மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது துப்பாகிச்சூடு

Published

on

Loading

கள்ள மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது துப்பாகிச்சூடு

  மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் பொலிஸார் மீது மோத முற்பட்ட வேளை, பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

Advertisement

டிப்பரை வீதி சோதனை கடமையில் இருந்த பொலிஸார் இடைமறித்தபோது, சமிக்ஞை கட்டமைப்பை மீறி பொலிசார் மீது வாகனத்தால் மோதிச் செல்ல முற்பட்டபோதே பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

துப்பாக்கிச் சுட்டு சம்பவத்தை தொடர்ந்து குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தப்பட்டது. அதனை அடுத்து டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டள்ளதோடு, டிப்பர் வாகனம் மற்றும் அதனுள் இருந்த சட்டவிரோத மணல் என்பவை அடம்பன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version