இலங்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சுயாதீன வழக்கு விசாரணை அலுவலம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சுயாதீன வழக்கு விசாரணை அலுவலம்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக சுயாதீன வழக்கு விசாரணை அலுவலகம் அவசியம் என போராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆறு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குக் காரணமானவர்களை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துவதற்கு சுயாதீன வழக்குரைஞர் அலுவலகம் அவசியம்.
கொலை செய்யும் கூலிப்படைகள் இல்லாத, வெள்ளை வான்கள் இல்லாத, சட்டவிரோத தடுப்பு முகாம்கள் இல்லாத புதிய சமூகமொன்றை அரசாங்கம் உருவாக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு அன்று நிலவிய அரசியல் கலாசாரமே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.