பொழுதுபோக்கு

எங்களுக்கு பணத்தாசை இல்லை; முடிந்தால் இப்படி ஒரு பாட்டை நீங்கள் போடுங்கள்: கங்கை அமரன் சவால்

Published

on

எங்களுக்கு பணத்தாசை இல்லை; முடிந்தால் இப்படி ஒரு பாட்டை நீங்கள் போடுங்கள்: கங்கை அமரன் சவால்

எங்களுக்கு பணத்தின் மேல் ஆசை இல்லை, அனுமதி கேட்டால் அண்ணன் உடனே கொடுத்துவிடுவார் என்று, குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல் பயன்படுத்தியது குறித்து கங்கை அமரன் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், த்ரிஷா, அர்ஜூன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்தில், அஜித் தனது பழைய படங்களின் கெட்டப் மற்றும், காட்சிகளின் மூலம் தனது ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார்.படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தாலும், படத்தில் பெரும்பாலான இடங்களில், ஏற்கனவே ஹிட்டான பழைய பாடல்களை படக்குழுவினர் பயன்படுத்தியுள்ளனர். இந்த பாடல் ப்ளேஸ் செய்யப்பட்ட விதமும் கதைக்கு பொருத்தமாக இருந்தது என்று பலரும் விமர்சனங்களில் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், இந்த பாடல்களை என் அனுமதி இல்லாமல் படத்தில் பயன்படுத்தியதற்கு காப்பிரைஸ்ட் கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.சமீப காலமாக, தமிழ் திரைப்படங்களில் தனது பாடல் பயன்படுத்தப்பட்டால், அதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றும் இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வருகிறார். மலையாளத்தில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த மஞ்ஜூமல் பாய்ஸ் படத்தில் கூட குணா படத்தின் பாடல் பயன்படுத்தப்பட்டது குறித்து இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி நஷ்டஈடு பெற்றுக்கொண்டார். இந்த வகையில் தற்போது குட் பேட் அக்லி படத்திற்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.அதே சமயம் படக்குழு தரப்பில் தாங்கள், ஏற்கனவே இந்த பாடல்கள், உரிமைகள் உள்ள தயாரிப்பு நிறுவனத்திடம் அனுமதி பெற்றுவிட்டோம் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது, இது குறித்து இளையராஜாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து கூறி வரும் நிலையில், இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் இது குறித்து பேசியுள்ளார். அவர், 7 கோடி கொடுத்தும் உங்கள் இசையமைப்பாளரிடம் இருந்து வாங்க முடியாத இசையை, எங்களிடம் இருந்து எடுத்து பெயர் கூடா போடாமல், வரவேற்பை பெற்றுள்ளீர்கள்.அந்த இசையில் எங்களுக்கும் பங்கு உண்டுதானே? அதற்கான கூலி எங்களுக்கு வரணும் தானே? எங்களுக்கு பணத்தாசை இல்லை. எங்களிடம் செலவு செய்ய முடியாமல் பணம் கொட்டிக்கிடக்கிறது. அனுமதி கேட்டால் அண்ணன் உடனே கொடுத்துவிடுவார். அஜித் படம் என்பதால் கேட்கவில்லை. எங்கள் இசை என்பதால் கேட்கிறோம். நாங்கள் ஏன் இன்னொருவருக்கு உதவ வேண்டும். நீங்களெ உழைத்து முன்னுக்கு வாருங்கள். முடிந்தால் உங்கள் இசையமைப்பாளரை வைத்து இப்படி ஒரு பாடலை போட சொல்லுங்கள் என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version