இலங்கை

காதலனால் கத்திக்குத்துக்கு இலக்காகி காதலி ; தீவிர விசாரணையில் பொலிஸார்

Published

on

காதலனால் கத்திக்குத்துக்கு இலக்காகி காதலி ; தீவிர விசாரணையில் பொலிஸார்

புத்தளம், வென்னப்புவ பிரதேசத்தில் காதலனால் கத்திக்குத்துக்கு இலக்காகி காதலி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

Advertisement

குறித்த சம்பவம் கடந்த 18 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ள நிலையில் 20 வயதுடைய காதலியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த காதலியும் சந்தேக நபரான காதலனும் ஒரு வருடத்துக்கும் அதிகமான காலமாக காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த காதலி சந்தேக நபருடனான காதல் உறவை முறித்து கொள்ள முயன்றுள்ளார்.

Advertisement

இதனால் கோபமடைந்த காதலன் சம்பவ தினத்தன்று, காதலியின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தகராறின் போது சந்தேக நபரான காதலன் தனது காதலியை கத்தியால் குத்திய போது படுகாயமடைந்த காதலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம், மாரவில பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version