இந்தியா

காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து துப்பாக்கிச்சூடு – 26 பேர் பலி!

Published

on

காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து துப்பாக்கிச்சூடு – 26 பேர் பலி!

தெற்கு காஷ்மீரில் உள்ள பிரபலமான சுற்றுலாப் பகுதியான பஹல்காமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர்.

 சுற்றுலாப் பயணிகள் குழுவை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

 இந்த தாக்குதலில் ஒரு இந்திய கடற்படை அதிகாரி மற்றும் ஒரு புலனாய்வுப் பணியக அதிகாரியும் கொல்லப்பட்டனர். 

 ஜம்மு காஷ்மீரில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 இந்தத் தாக்குதலில் மற்றொரு குழுவினர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை வெளியேற்ற இராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

 சம்பந்தப்பட்ட பகுதிக்கு வாகனங்களை கொண்டு செல்வதில் உள்ள சிரமங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 இந்தத் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை, மேலும் இது இஸ்லாமிய பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

Advertisement

(வீடியோ VIDEO)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version