இந்தியா

சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு – குறைந்தது 28 பேர் உயிரிழப்பு

Published

on

சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு – குறைந்தது 28 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் காஷ்மீரில் உள்ள பஹல்காம் என்ற சுற்றுலா நகருக்கு அருகே சுற்றுலாப் பயணிகள் குழு மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியதியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவருகின்றது. நேற்றுப் பிற்பகல் 3 மணி அளவில் பைசரன் மலையின் பைன் மரக்காட்டு பகுதியிலிருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன்  இறங்கி வந்தனர். அவர்கள், அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். அதில் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Advertisement

பயங்கரவாதிகள் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் கர்நாடகா, ஒடிசா, குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் அடங்குவார்கள் என்று கூறப்படுகின்றது. 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் கூறப்படுகின்றது.

இந்தப் பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, ஈரான், சவுதி அரேபியா, இத்தாலி, உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினருடன் 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. ஜே.டி.வான்ஸ் நேற்று ராஜஸ்தானில் இருந்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version