இலங்கை
நீதிமன்றில் சரணடைந்த நெவில் சில்வாவுக்கு பயணத்தடை
நீதிமன்றில் சரணடைந்த நெவில் சில்வாவுக்கு பயணத்தடை
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் , சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான நெவில் சில்வா இன்று நீதிமன்றில் சரணடைந்ததைத் தொடர்ந்து, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும்
அத்துடன், அவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வெலிகமவில், கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கின் 9 ஆவது சந்தேக நபரான அவர் இன்று நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.