இலங்கை
யாழில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்றால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்றால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் குடவத்தை, துன்னாலை பிரதேசத்தை சேர்ந்த மணியம் ஜெகதீஸ்வரன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் திடீர் உடல்நல குறைவு காரணமாக நேற்று பு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை கொண்டு சென்ற போது அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பிரதேச பரிசோதனையில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.