இலங்கை

ஆயுதத்தால் உலகத்துக்கு ஆபத்தா? பாபா வங்காவின் அடுத்த திடுக்கிடும் கணிப்பு

Published

on

ஆயுதத்தால் உலகத்துக்கு ஆபத்தா? பாபா வங்காவின் அடுத்த திடுக்கிடும் கணிப்பு

பாபா வங்காவின் கணிப்புகளின் படி, எதிர்வரும் 2066-ஆம் ஆண்டு குறிப்பிட்ட சில நாடுகள் ஆயுதத்தால் உலகத்துக்கு ஆபத்து விளைவிக்கும் என கூறப்படுகிறது.

கடந்த 1911 இல் பல்கேரியாவில் பிறந்த வான்ஜெலியா பாண்டேவா டிமிட்ரோவா என அழைக்கப்படும் பாபா வங்கா ஒரு கிராமப்புற குடும்பத்தில் வளர்க்கப்பட்ட குழந்தையாக இருந்தபோது இயற்கை சீற்றத்தால் பார்வையை இழந்துள்ளார்.

Advertisement

அதன் பின்னர் அவருக்கு எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் திறன் கிடைத்துள்ளது.

அந்த வகையில் எதிர்வரும் 2066 ஆம் ஆண்டில் என்னெ்னன நடக்கவிருக்கின்றது என பாபா வங்கா கூறியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

பாபா வங்காவின் கணிப்பில், எதிர்வரும் 2066 ஆம் ஆண்டில், அமெரிக்கா மிகவும் ஆபத்தான ஒரு ஆயுதத்தை உருவாக்கும் என கூறப்படுகிறது.

Advertisement

அதே போன்று அடுத்த 41 ஆண்டுகளில் அமெரிக்கா கண்டுபிடிக்கும் ஆயுதம் உலக சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறவும் வாய்ப்பு உள்ளது.   

 

ஏற்கனவே பாபா வங்கா கணித்த கணிப்புக்கள் பலித்துள்ளதால் இதுவும் பலிக்க வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சம் கொள்கிறார்கள். அமெரிக்கா தனது ஆயுதங்கள் மூலம் முழு உலகையும் தனது ஆதிக்கத்திற்கு கீழ் கொண்டு வரும்.

Advertisement

பாபா வங்கா தனது வாழ்நாளில் பல கணிப்புகளைச் செய்தார், அவற்றில் பெரும்பாலானவை உண்மையாகியுள்ளதால் அவரது கணிப்புகளில் அமெரிக்காவின் 9/11 இரட்டைக் கோபுர தாக்குதல்கள், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் 2004 சுனாமி உள்ளிட்ட அனர்த்தங்களும் உள்ளடங்கியுள்ளன.

இதனை தெரிந்து கொண்ட பல ஊடகங்களின் அறிக்கையின் படி, அமெரிக்கா பல ஆபத்தான கொடிய ஆயுதங்களை வைத்திருக்கிறது. உலகின் மிக சக்திவாய்ந்த அணு ஆயுதங்கள் அமெரிக்காவில் தான் உள்ளது.

உலக வரலாற்றில் வேறு ஒரு நாட்டின் மீது அணு ஆயுதத்தைப் பயன்படுத்திய ஒரே நாடு அமெரிக்கா என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

Advertisement

கடந்த 1945 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணு குண்டை வீசியதால் மில்லியன் கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டனர். அதன் பாதிப்பு இன்று வரை உலக வரலாற்றின் அழிக்க முடியாத கரும் புள்ளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version