இலங்கை
தெல்லிப்பளையில் உள்ள மகளிர் இல்லத்தில் யுவதி உயிரிழப்பு
தெல்லிப்பளையில் உள்ள மகளிர் இல்லத்தில் யுவதி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் (வயது 22) தவறான முடிவெடுத்து நேற்று உயிரிழந்துள்ளார்.
அவருடைய சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இறப்புக்கான காரணம் தொடர்பில் இன்னமும் உத்தியோகபூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை.