இலங்கை
துணை சுகாதார பட்டதாரிகளுக்கு பொது அறிவு பரீட்சை ; அநுர கட்சியால் அழுத்தம்
துணை சுகாதார பட்டதாரிகளுக்கு பொது அறிவு பரீட்சை ; அநுர கட்சியால் அழுத்தம்
பொது அறிவு பரீட்சையில் கட்டாயமாக பங்கேற்குமாறு துணை சுகாதார பட்டதாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பது சிக்கலானது என்று சுகாதார பணியாளர்களின் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான முடிவு ஒரு சட்டவிரோத செயல் என்று அதன் அமைப்பின் செயலாளர் வைத்தியர் நிலான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பரீட்சையில் கட்டாயம் பங்கேற்குமாறு இம்முறை தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களால், இணை சுகாதார பட்டதாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், இணை சுகாதார பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் போது இதுபோன்ற பரீட்சைகள் நடத்தப்பட வேண்டும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் மன்றத்தில் தலைவர் தெரிவித்துள்ளார்.