இலங்கை

யாழில் நேர்ந்த துயர நிகழ்வு ; வேலைக்கு சென்று வீடு திரும்பிய முதியவருக்கு நேர்ந்த கதி

Published

on

யாழில் நேர்ந்த துயர நிகழ்வு ; வேலைக்கு சென்று வீடு திரும்பிய முதியவருக்கு நேர்ந்த கதி

யாழில் விபத்தில் சிக்கி   யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி மோதியதி விபத்துக்குள்ளானதில் ஆணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

Advertisement

இதன்போது வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 60 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 24ஆம் திகதி மாலை வேலைக்கு சென்றுவிட்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் அவர்மீது முச்சக்கர வண்டி மோதியது.

Advertisement

பின்னர் அவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்றையதினம் அதிகாலை அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version