இலங்கை
வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்: யாழில் சாதித்த இரட்டையர்கள்!
வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்: யாழில் சாதித்த இரட்டையர்கள்!
2024 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த மாணவர்களான இரட்டை சகோதரர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர்.
அத்தோடு, அதே இரு சகோரர்தகள் தேசிய மட்டத்தில் 3ஆம் மற்றும் 5ஆம் இடங்களை பெற்றுள்ளனர். சி.ஜமுனானந்தா பிரணவன்(முதலாம் இடம்) மற்றும் சி.ஜமுனானந்தா சரவணன் (இரண்டாம் இடம்) ஆகிய இரு சகோதரர்களே இவ்வாறு உயர்தரத்தில் சாதணை படைத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த மாணவர்களின் தந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
(வீடியோ VIDEO)
அனுசரணை