இலங்கை

உயர்தர பரீட்சையில் வரலாற்று சாதனை படைத்த யாழ். இந்து கல்லூரி மாணவர்கள்

Published

on

உயர்தர பரீட்சையில் வரலாற்று சாதனை படைத்த யாழ். இந்து கல்லூரி மாணவர்கள்

நேற்றையதினம் வெளியாகிய 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 55 3 ஏ சித்திகளையும், 55 2 ஏ சித்திகளையும், 19 ஏ 2பி சித்திகளையும் பெற்று யாழ். இந்துக் கல்லூரி சாதனை படைத்துள்ளது.

  பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த மாணவர்களான சி.ஜமுனானந்தா பிரணவன் (முதலாம் இடம்) மற்றும் சி.ஜமுனானந்தா சரவணன் (இரண்டாம் இடம்) ஆகிய இரட்டை சகோதரர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Advertisement

அத்துடன், விஞ்ஞான பிரிவில் 22 பேர் 3A சித்திகளையும் 13 பேர் 2A சித்திகளையும் 06 பேர் A2B சித்திகளையும் பெற்றுள்ளனர்.

பௌதீக விஞ்ஞான பிரிவில் 27 பேர் 3A சித்திகளையும் 16 பேர் 2A சித்திகளையும் 11 பேர் A2B சித்திகளையும் அடைந்துள்ளனர்.

மேலும், வணிகப்பிரிவில் ஒருவர் 3A சித்திகளையும் 2 பேர் 2A சித்திகளையும் 2 பேர் A2B சித்திகளையும் பெற்றுள்ளனர்.

Advertisement

கலைப்பிரிவில் 02 பேர் 2A சித்திகளை அடைந்துள்ளனர்.

இதேவேளை, உயிரியல் தொழிநுட்பப் ( B-Tech) பிரிவிலும் இயந்திரவியல் தொழினுட்ப (E-Tech) பிரிவிலும் தலா ஒருவர் 3A சித்திகளை பெற்றுள்ளனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version