இலங்கை

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 28 வேட்பாளர்கள் கைது

Published

on

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 28 வேட்பாளர்கள் கைது

உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 28 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி வரை330 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Advertisement

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 259 முறைப்பாடுகளும், தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 71 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இந்நிலையில், தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 28 வேட்பாளர்களும், 111 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடவடிக்கைகளுக்காகச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட 26 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version