இலங்கை
கால்வாய்க்குள் விழுந்த மோட்டார் சைக்கிள் ; பலியான அதிபர்
கால்வாய்க்குள் விழுந்த மோட்டார் சைக்கிள் ; பலியான அதிபர்
பதுளை, கந்தேகெதர பகுதியில் திங்கட்கிழமை (28) காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் உயிரிழந்ததாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் தனது மோட்டார் சைக்கிளில் பாடசாலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது பதுளை அலுகொல்ல – கந்தேகெதர வீதியில் தியனாவல கோவிலுக்கு அருகில் வைத்து வேறொரு வாகனத்திற்கு இடமளிக்க முயன்ற போது கால்வாய்க்குள் விழுந்து உயிரிழந்ததாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் கந்தேகெதர மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.