சினிமா

அஜித்தின் கூட்டணிக்காக பல நாள் காத்திருந்தும் ஏமாற்றமே கிடைத்தது..! சோகத்தில் இயக்குநர்!

Published

on

அஜித்தின் கூட்டணிக்காக பல நாள் காத்திருந்தும் ஏமாற்றமே கிடைத்தது..! சோகத்தில் இயக்குநர்!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைத் தேர்வு, வித்தியாசமான திரைக்கதைகள், உணர்வும் திரில்லும் கலந்த படைப்புக்கள் எனப் பல துறைகளில் தனியிடம் பெற்றவர்கள் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி ஜோடி. விக்ரம் வேதா, சூது கவ்வும் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவுக்கு பல புதுமைகளை வழங்கியுள்ளார். தற்போது அவர்கள் கூறிய ஒரு கருத்து, அஜித் ரசிகர்களிடம் மட்டுமல்ல, கோலிவுட் ரசிகர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அவர்கள் எதிர்காலத்தில் அஜித் குமாருடன் ஒரு திரைப்படத்தில் பணியாற்றும் ஆசையோடு காத்திருப்பதாக பல நாட்களாகவே தெரிவித்துள்ளனர். சமீபத்திய ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில், புஷ்கர் மற்றும் காயத்ரியிடம் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில் ஒன்று, “அஜித் குமாருடன் ஒரு படம் எடுக்க ஆசையா இருக்கா?” என்று கேட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த புஷ்கர் – காயத்ரி ஜோடி, “அஜித் சார் நிச்சயமாக ஒரு மாஸ் ஹீரோ. அவருக்கு ரசிகர்களிடம் பெரும் மதிப்பும், ஈர்ப்பும் உண்டு. நாங்களும் உங்கள் எல்லாரையும் போலவே அஜித் சார் உடன் பணியாற்றும் வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அந்த சந்தோசம் எங்களுக்கு ஒருநாள் கிடைக்கும் என நம்புகிறோம்.” எனத் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில், தமிழ் சினிமாவில் உள்ள பல இயக்குநர்கள் அஜித் குமாருடன் வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன் இருக்கின்றனர். அந்தவகையில் பல ஆண்டுகளாக புஷ்கர் – காயத்ரி ஜோடியின் ஆசை நிறைவேறாது உள்ளமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியதுடன் பலரும் விரைவில் அஜித்துடன் படப்பிடிப்பினை தொடங்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version