இலங்கை

20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் ; சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

Published

on

Loading

20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் ; சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, கெரோலினா தோட்ட பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற ஒரு குழுவினர் பயணித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், காயமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பேருந்துக்கு வழிவிட முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version