இலங்கை

இளைஞருக்கு எமனாக மாறிய உழவு இயந்திரம் ; இரவு வேளையில் நேர்ந்த துயர்

Published

on

இளைஞருக்கு எமனாக மாறிய உழவு இயந்திரம் ; இரவு வேளையில் நேர்ந்த துயர்

வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவெலிதென்ன வீதியில் சூரியவெவ பகுதியில் நேற்று (11) இரவு ஒரு உழவு இயந்திரம் மோதியதில் 26 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

சிங்கபுர சந்தியிலிருந்து மகாவலிதென்ன நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் இருந்து வந்த டிராக்டருடன் நேருக்கு நேர் மோதியதியுள்ளது.

Advertisement

காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இறந்தவர் வெலிகந்த பகுதியைச் சேர்ந்தவர்.

உழவு இயந்திர ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version