இலங்கை
ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் மே 17-ஆம் திகதி முதல் தொடங்கும் என்று பி.சி.சி.ஐ. இன்று (மே 12) அறிவித்துள்ளது.
இறுதிப்போட்டி ஜூன் 3-ஆம் திகதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகள் நடைபெறும் இடங்கள்:
பெங்களூரு,
ஜெய்ப்பூர்,
டில்லி,
லக்னோ,
மும்பை,
அகமதாபாத்
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான தீவிர போரால் ஒத்திவைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 17 போட்டிகளும் 6 இடங்களில் நடத்தப்படும்.
மே 29 முதல் தகுதிச்சுற்று போட்டியும், மே 30 நொக்-அவுட் போட்டியும், ஜூன் 1 அரையிறுதிச் சுற்று ஆட்டமும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் – தில்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.