இலங்கை

யாழில் பிரம்மாண்டமாக இடம்பெற்ற இந்திர விழா

Published

on

Loading

யாழில் பிரம்மாண்டமாக இடம்பெற்ற இந்திர விழா

  யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா சித்திரா பௌர்ணமி தினமான நேற்றைய தினம் இடம்பெற்றது.

இந்நிலையில் சித்திரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு வல்வை மக்களால் இந்திர விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisement

ஆலயத்தை சூழவுள்ள சுமார் 3 கிலோமீற்றர் தூர வீதி மின் விளக்கு சேடனைகள், இந்து தெய்வங்களின் பாரிய பதாகைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அத்துடன் பத்துக்கும் மேற்பட்ட மேடைகள் அமைக்கப்பட்டு இசை, நடன நிகழ்வுகள் மற்றும் இசைக்கச்சேரி என்பனவும் இடம்பெற்றமை பக்தர்களை மகிழ்ச்சி கொள்ள வைத்தது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version